உலகம் இன்னும் சுயநலனோடு இயங்குகின்றது.!!

பாம்புக்கு பால்வார்க்கும் உலகம்
பசித்தவனைப் பார்க்கவில்லை
பசித்தவனைப் பார்த்திருந்தால்
பாவம் தானாய் போயிருக்கும்

பசிவயிறு பாத்திருக்க
பாதகம் செய்த நெஞ்சம்
பாவியாயே செத்திடட்டும்
பால் வார்த்து என்ன பலன்

பாவமது பாத்தே களைத்தது
பசிதாகம் கொண்ட உடல்
பரிதவிக்க கண்டீரோ
பசி போக்க எண்ணிடுவீர்

பசி ஆறிய வயிறு வாழ்த்தும்
வாழ்ந்திடுவீர் பல வருடம்
பாவமேது பழியேது
பசி போக்க நினைத்திடுவீர்

கல் நெஞ்சு வேண்டாமே
நல் நெஞ்சு கொண்டிடுவீர்
நாதியற்றவர் நாமென்ற
அவ் வார்த்தை வேண்டாமே

உண்ட உணவு வேறாயினும்
உதிரும் இரத்தத்தில் ஏது கண்டீர்
வாழ வைத்து வாழ்ந்திடுவீர்
நிம்மதியாய் உறங்கிடுவீர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.