அகில இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடல் !!
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 13 ஆம் திகதி செப்டம்பர் மாதம் [ 13.09.2019 வெள்ளிக்கிழமை ] கொழும்பில் இடம்பெறஉள்ளது
இவ் ஒன்று கூடல் குறித்து கடந்த 11.08.2019 அன்று தலைவர் ஆர் .சிவராஜா தலைமையில் இடம்பெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தின் போதே தெரிவிக்கப் பட்டது .
.
எனவே குழுத் தீர்மானத்திற்கு அமைய அனைத்துத் தமிழ் ஊடகவியலாளர்களும் தங்கள் பெயர் , முகவரி, தொடர்பு இலக்கம் அலுவலக முகவரி உட்பட அனைத்து விபரங்களுடன் சுயமாக தயாரிக்கப் பட்ட விண்ணப்பப் படிவங்களை இம்மாதம் 25 ஆம் திகதிக்கு [ 25.08.2019] முன்பு முற்பதிவு செய்துகொள்ளும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் . வடமாகாண ஊடகவியலாளர்கள் தங்கள் பதிவுகளை வடமாகாண இணைப்பாளர்களான யாழ் .தர்மினி பத்மநாதன்
jaaltharmini@gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0776544158 என்ற இலக்கத்திலும் ,
முல்லை மாவட்டத்தைச் சேர்ந்த யூட் நிமலன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் .
மேலும் , தலைவர் . ஆர் .சிவராஜா , செயலாளர் யோ . நிமல்ராஜ் ,[தினக்குரல் ] பொருளாளர் ப.விக்னேஸ்வரன் [சூரியன் fm ] மற்றும் மட்டக்களப்பு மாவட் ட இணைப்பாளர் எஸ் .மணிசேகரன் ஆகியோரையும் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளும் படி அறிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
[யாழ்.தர்மினி பத்மநாதன் ]
கருத்துகள் இல்லை