லாஸ்லியா கேட்ட ஒற்றை கேள்வி-மிரண்டு போன மதுமிதா!

தற்போது பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 6 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். தற்போது ஒவ்வொரு சீசனிலும் சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் என ஏதாவது ஒரு வில்லங்கம் அரங்கேறி வருகிறது.



தற்போது பிக்பாஸ் வீட்டில் இன்றும் பெண்களை ஆண்கள் உபயோகிக்கிறார்கள் என்ற மதுவின் கேள்வியால் மேலும் சண்டை துவங்கியுள்ளது போன்று பிக்பாஸின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் மதுமிதா மீண்டும் அதே தலைப்பினை எடுத்து சண்டையிடுகின்றார்.

மேலும் இதனால் பொறுமையாக இருந்த லாஸ்லியா ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து இவ்வளவு நாள் நீங்க வேற்றுக்கிரகத்துலயா இருந்தீங்க என்ற கேள்வியால் மதுமிதா வாயடைத்துப் போய் நிற்கின்றார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.மேலும் இதனால் இன்று என்ன பிரச்சனை வருகிறதோ என பிக்பாஸ் ரசிகர்கள் ஆரவத்தில் உள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.