திருகோணமலையில் வசமாக சிக்கிய இருவர்!!

திருக்கோணமலை - மொரவெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து உழவு இயந்திரமொன்று கைப்பற்றப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவர்கள் தொடர்பில் முன் குற்றங்கள் உள்ளனவா என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவு‌ம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo #Trincomalee #Court

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.