வைகோ பேச மருத்துவர்கள் தடை!
மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மருத்துவப் பரிசோதனைக்காக ஆகஸ்டு 18 ஆம் தேதி மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கே சில பரிசோதனைகள் முடிந்த நிலையில் நேற்று (ஆகஸ்டு 19) முதல் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் வைகோ.
இதையடுத்து வைகோவின் அடுத்த இரண்டு வார நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. மேலும் வைகோவை அலைபேசி மூலமோ, மருத்துவமனை தொலைபேசி மூலமோ, நேரிலோ யாரும் சந்தித்திட வேண்டாம் என்று கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கிடையில் நேற்று இரவு ஒன்பது மணிக்கு வைகோவை சந்திக்க மருத்துவமனைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நலம் விசாரித்துவிட்டு வைகோவுடன் சிறிது நேரம் ப் உரையாடிவிட்டு வந்துள்ளார்.
இடைவிடாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாலும், அதிக நேரம் ஒலிபெருக்கியில் பேசுவதாலும் வைகோவின் உடல் நலக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள்,
‘இப்போதைக்கு நீங்கள் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம். கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள். குறிப்பாக யாரோடும் அதிகமாக பேசிட வேண்டாம்’ என்று உரிமையோடு வைகோவுக்கு தடை போட்டிருக்கிறார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதையடுத்து வைகோவின் அடுத்த இரண்டு வார நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. மேலும் வைகோவை அலைபேசி மூலமோ, மருத்துவமனை தொலைபேசி மூலமோ, நேரிலோ யாரும் சந்தித்திட வேண்டாம் என்று கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கிடையில் நேற்று இரவு ஒன்பது மணிக்கு வைகோவை சந்திக்க மருத்துவமனைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நலம் விசாரித்துவிட்டு வைகோவுடன் சிறிது நேரம் ப் உரையாடிவிட்டு வந்துள்ளார்.
இடைவிடாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாலும், அதிக நேரம் ஒலிபெருக்கியில் பேசுவதாலும் வைகோவின் உடல் நலக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள்,
‘இப்போதைக்கு நீங்கள் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம். கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள். குறிப்பாக யாரோடும் அதிகமாக பேசிட வேண்டாம்’ என்று உரிமையோடு வைகோவுக்கு தடை போட்டிருக்கிறார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை