சமுத்திரக்கனி - விஷால் அமைக்கும் புது கூட்டணி!
சமுத்திரக்கனி அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார்.
விரைவில் வெளிவரவிருக்கும் நாடோடிகள் 2 படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் பல படங்களில் நாயகனாகவும், முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து வரும் சமுத்திரக்கனி இயக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. சிவம் என்ற ஆன்மிகக் கதையைப் படித்த சமுத்திரக்கனி இந்தக் கதைக்கு விஷால் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் கதையைக் கூறியுள்ளார். விஷாலுக்கும் இந்தக் கதை பிடித்துவிட, உடனே அந்தக் கதையைத் திரைப்படமாக்க உரிமை பெற்றுள்ளாராம் சமுத்திரக்கனி.
இந்தத் திரைப்படம் ஓர் ஆன்மிக ஆக்ஷன் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தில் பங்குபெறவுள்ள கலைஞர்கள் பற்றிய விவரம் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். தமன்னா இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த பின்னர், விஷால் சமுத்திரக்கனி படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நெறஞ்ச மனசு, நிமிர்ந்து நில் ஆகிய படங்களுக்குப் பிறகு சமுத்திரக்கனி முன்னணி நாயகனை வைத்து இயக்கவுள்ள படம் இது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
விரைவில் வெளிவரவிருக்கும் நாடோடிகள் 2 படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் பல படங்களில் நாயகனாகவும், முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து வரும் சமுத்திரக்கனி இயக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. சிவம் என்ற ஆன்மிகக் கதையைப் படித்த சமுத்திரக்கனி இந்தக் கதைக்கு விஷால் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் கதையைக் கூறியுள்ளார். விஷாலுக்கும் இந்தக் கதை பிடித்துவிட, உடனே அந்தக் கதையைத் திரைப்படமாக்க உரிமை பெற்றுள்ளாராம் சமுத்திரக்கனி.
இந்தத் திரைப்படம் ஓர் ஆன்மிக ஆக்ஷன் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தில் பங்குபெறவுள்ள கலைஞர்கள் பற்றிய விவரம் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். தமன்னா இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த பின்னர், விஷால் சமுத்திரக்கனி படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நெறஞ்ச மனசு, நிமிர்ந்து நில் ஆகிய படங்களுக்குப் பிறகு சமுத்திரக்கனி முன்னணி நாயகனை வைத்து இயக்கவுள்ள படம் இது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை