புதிய கிராமங்களை திறந்து வைத்தார் சஜித்!!

“அனைவருக்கும் வீடு” எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் இரண்டு வீடமைப்புக் கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, மாவடி முன்மாரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 269ஆவது மற்றும் 270ஆவது வீடமைப்பு திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

தாந்தா மலையில் நிர்மாணிக்கப்பட்ட குமரன் குடியிருப்பு, மாவடி முன்மாரியில் அமைக்கப்பட்ட காளிகாபுரம் குடியிருப்பு ஆகியவற்றை அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வீட்டு உரிமையாளர்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டதுடன் வீடுகள் புனரமைப்புக்கான கடன்களும் வழங்கப்பட்டன. அத்துடன் கண்பார்வை குறைபாடானவர்களுக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.