தமிழீழ விடுதலை புலிகள் குறித்து பேசவேயில்லை..! முரளிதரன் தடாலடி!!!
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள் என தான் ஒருபோதும் கூறவில்லை என கிாிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தான் தமிழீழ விடுதலை புலிகள் தொடா்பாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாயவுக்கு ஆதரவாக நேறையதினம் கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தமிழீழ விடுத லை புலிகள் அழிக்கப்பட்ட நாள் தனக்கு மகிழ்ச்சியான நாள் எனவும், புலிகள் மக்களை கொன்றாா்கள் எனவும் முரளிதரன் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
முரளிதரனின் இந்தக்கருத்து பெரும் சா்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
இந் நிலையில் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
மேலும் , என்னுடைய கருத்து திாிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் முரண்பாடுகள் நீடிப்பதற்கு சில அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும் செயற்பாடுகளே காரணமாக அமைகின்றதாகவும் “2009 – 2019 இற்கு இடைப்பட்ட யுத்தம் அற்ற சூழல் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2019 இல் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனவே என்னுடைய வாக்கு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவருக்கே வழங்கப்படும் என்பதையே தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு யுத்தம் மகிழ்ச்சியான விடயம் அல்ல என்பதைதான் தாம் தெரிவித்திருந்ததாகவும் ஆனால், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை தொடர்பான எந்த வார்த்தையையும் தாம் பிரயோகிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் சிறுபான்மை கட்சிகள் தொடர்பான கேள்விக்கு, கட்சி ரீதியான – மத ரீதியான அரசியல் கட்சிகளின் செய்ற்பாடுகள் நாட்டில் பிரிவினைகளை ஏற்படுத்துகின்றது என்ற வகையில் அவை அகற்றப்பட வேண்டும் என்ற விடயத்தையும் கூறியிருக்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளிப்படையாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று முரளிதரன் தெரிவிக்கின்றபோதிலும் கோட்டபாய ராஜபக்ஷ ஆதரவு கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றி, யுத்ததை முடிவுக்கு கொண்டு வரப்பபட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் முரளிதரனின் எதிர்பார்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறிப்பாக தான் தமிழீழ விடுதலை புலிகள் தொடா்பாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாயவுக்கு ஆதரவாக நேறையதினம் கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தமிழீழ விடுத லை புலிகள் அழிக்கப்பட்ட நாள் தனக்கு மகிழ்ச்சியான நாள் எனவும், புலிகள் மக்களை கொன்றாா்கள் எனவும் முரளிதரன் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
முரளிதரனின் இந்தக்கருத்து பெரும் சா்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
இந் நிலையில் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
மேலும் , என்னுடைய கருத்து திாிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் முரண்பாடுகள் நீடிப்பதற்கு சில அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும் செயற்பாடுகளே காரணமாக அமைகின்றதாகவும் “2009 – 2019 இற்கு இடைப்பட்ட யுத்தம் அற்ற சூழல் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2019 இல் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனவே என்னுடைய வாக்கு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவருக்கே வழங்கப்படும் என்பதையே தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு யுத்தம் மகிழ்ச்சியான விடயம் அல்ல என்பதைதான் தாம் தெரிவித்திருந்ததாகவும் ஆனால், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை தொடர்பான எந்த வார்த்தையையும் தாம் பிரயோகிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் சிறுபான்மை கட்சிகள் தொடர்பான கேள்விக்கு, கட்சி ரீதியான – மத ரீதியான அரசியல் கட்சிகளின் செய்ற்பாடுகள் நாட்டில் பிரிவினைகளை ஏற்படுத்துகின்றது என்ற வகையில் அவை அகற்றப்பட வேண்டும் என்ற விடயத்தையும் கூறியிருக்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளிப்படையாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று முரளிதரன் தெரிவிக்கின்றபோதிலும் கோட்டபாய ராஜபக்ஷ ஆதரவு கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றி, யுத்ததை முடிவுக்கு கொண்டு வரப்பபட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் முரளிதரனின் எதிர்பார்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை