இளைஞன் ஒருவர் கொத்மலை ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த இளைஞன் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவரது பயிர்செய்கையை பார்வையிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தவறி விழுந்த இளைஞனை மீட்ட சிலர், அவரை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டுள்ளனர். எனினும் அவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவைச் சேர்ந்த ராஜேந்திரன் நவீந்திரன் (வயது – 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.