போலிக் கடவுச்சீட்டை கண்டறிய புதிய நடைமுறை!!

இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.


எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரியல் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான கருவிகள் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

போலியான தகவல்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டை கொண்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்தல் மற்றும் நாட்டில் இருந்து வெளியேறுவதை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.