வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றம்!

வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விரைவில் அது வெடித்துச் சிறதப்போவதாகவும் வந்த அனாமேதய தொலைபேசி அழைப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை காலை பதற்றநிலை ஏற்பட்டது.


பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் இன்றையதினம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலையை பொலிஸார் சுற்றிவளைத்ததோடு பொலிஸ் மோப்ப நாய்களைக் கொண்டு குண்டுகள் இருக்கின்றனவா என்ற தீவிர சோதனையையும் மேற்கொண்டனர்.

இவ்வாறு குண்டு இருப்பதாக வந்த எச்சரிக்கை அழைப்பு காட்டுத்தீயாக பரவியதை அடுத்து வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள், அவர்களுடைய உறவினர்கள் மட்டுமன்றி வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் அச்சமடைந்தனர்.

சோதனை மேற்கொள்ளபட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.