எழுக தமிழுக்கு தென்மராட்சி பொது அமைப்புகள் பூரண ஆதரவு!📷

தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி யாழ் மண்ணில் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவுகோரி தென்மராட்சி பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்கள் பேரவையினர் மேற்கொண்டிருந்த சந்திப்பையடுத்து எழுக தமிழுக்கு பூரண ஆதரவினை வழங்குவதென ஏகமனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள மண்டபமொன்றில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றிருந்த இச்சந்திபில், ஒன்றுபட்ட தேசமாக தமிழர்கள் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும் முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட வர்த்தக சங்கங்கள், சிற்றூர்திகள் சேவைச் சங்கம், கடற்றொழிலாளர் சங்கங்கள், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், மாதர் சங்கங்கள்#

உள்ளடங்கிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் என சுமார் ஐம்பதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற இக்கலந்துரையாடலின் முடிவில் தென்மராட்சி பகுதிக்குட்பட்ட வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குவதுடன் எழுக தமிழுக்கு பூரண ஆதரவினை வழங்குவதெனவும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.