நான் உங்களை தலைகுனிய வைத்துவிட்டேனா ?

நெகிழ்ந்து உருகி அழுது தாயிடம் கேட்கும் லோஸ்லியாவின் அன்பு கவினுக்கும் தேவைப்பட்டிருக்கலாம் .

தன் காதலை அபிராமி ,சாக்ஷி போல் தன் இஸ்டத்துக்கு போட்டு உடைக்காமல் நிழல் அப்பாவான சேரனின் சொல்லுக்கும் கீழ்படிந்து இருதலைக் கொள்ளி எறும்பாக அவள் அங்கே தவித்தது தன் நாடு, தன் குடும்பம் என்பதுக்காகத்தான் என்பதை யாரும் புரியாமல் விட்டுவிட்டார்களே .

குறிப்பாக தன் தந்தையே புரியாமல் விட்டு விட்டாரே என்பது லோஸ்லியாவுக்கு தீராத துன்பம்தான் .

மன உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தன் மகள் என்ற உரிமையில் ஆதங்கமான உணர்வை கொட்டித்தீர்த்த மரியநேசன் சிறந்த தந்தைதான் .
இருப்பினும் தன் மகளை தானே மற்றவர்முன் வசை பாடி இருக்க வேண்டாமே என்று தோன்றுகின்றது .

மரியநேசன் கொந்தளித்த நிமிடத்துக்கும் மகளை கொஞ்சி பேசிய நிமிடத்துக்கும் எத்தனை வித்தியாசம் ?

மகள்களை பெற்ற தந்தைகள் வீரமான ,விவேகமானவர்களாக இருக்கத்தான் வேண்டும் ஆனாலும் ....அவ்வளவுக்கு திட்டும் அளவுக்கு அவள் எந்த தப்பும் செய்யவில்லை என்றே தோன்றுகின்றது.

 -லொஸ்லியாவுக்காக ப்ரியமதா -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.