மருதமுனையில் இருவர் கைது!!

மருதமுனையில் இரண்டு கைத்துப்பாக்கிகளை காரில் வைத்திருந்த நபர்களை இன்று விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மருதமுனை பெரியநீலாவணை எல்லைப்பகுதியில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் கார் ஒன்றில் கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்ட நிலையில் காரில் இருந்த நபர்கள் பொலிசாரால் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதான குறித்த நபர்கள் தற்போது கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கைதான நபர்கள் பொலனறுவை வெலிகந்தை பொலிஸ் பிரிவில் பணியாற்றுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.