காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டம்!📷

காணாமல்போனோர் அலுவலகத்தின் யாழ் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் யாழ் பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அஞ்சலி செலுத்திய, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அங்கிருந்து காணாமல்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் யாழ் பிராந்திய பணியகத்தை திறப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும் அதனையும் மீறி மிகவும் இரகசியமான முறையில் அதிகாலை வேளை குறித்த பணியகம் கடந்த மாத இறுதியில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பணியகத்தை அகற்றுமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.