என் கனவு - கவிதை!!

சாளரத்திற்கும் கதவிற்குமான
இடைப்பட்ட வெளியின்
தூரத்தில் பயணிக்கும்
எறும்பின் தடங்களை
விழுங்கிக்கொண்டிருக்கிறது
என் கனவு ...


இரு மழைத்துளிகளுக்குள்
நடுவில் பெய்யும் சிறுவெயிலில்
தலையணை வைத்து

உறக்கமில்லாமல் தொலைகிறது
என் மனது ...

இறக்கைகளை விரித்து மிதக்கின்ற
பறவையின் மேலேறி இருகைகளால்
பிடித்திழுக்க முயற்சி செய்கிறேன்
காற்று என்னை அங்கலாய்ப்பு
செய்து மேகத்தை இடியைப்போல்
தலை மேல் வைக்கிறது ...

மௌனத்திற்கும் சொற்களுக்குமான
இடைவெளியை நிரப்பிச்செல்லும்
உமிழ்நீரைக் கொண்டு
கடல் ஒன்று தயாரிக்கிறேன் ...

நங்கூரத்திற்கும் ஆழ்மணலிற்கும்
நடுவில் தான் தொலைத்திருக்கிறேன்
ஆழ்மனதை ....

ஒருவேளை மீன்கள் முத்தமிட்டு
சிப்பிக்குள் முத்தாக
பிறக்கவும் வாய்ப்பிருக்கு ...

ராம் பெரியசாமி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.