இளையவர்கள் அறிவு கெட்டவராய் ஏன் இருக்கிறார்கள்!!

இளையவர்கள் சமூக தேசிய பூகோள அறிவு அற்றவர்களாக ஏன் இருக்கிறார்கள்


ஒரு வீடு புகுந்து திருடும் போது வீட்டுக்காரர் பார்க்கும் போது இருவருக்கும் யுத்தம் சத்தம் ரத்தம் வருகிறது நித்தம்

பின் தந்தை கொல்லப் படுகிறான்
தாயின் காலில் வெட்டு விழுந்து காலற்றவளாய்ப் போகிறாள்
மகளைப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திக் காணாமல் ஆக்குகின்றனர்
மகனைச் சிறையில் அடைக்கின்றனர்

இப்போது அந்தத் திருடர்
திருடிய சொத்து வட்டி மற்றும் குட்டி போட்டதால்
அதில் ஒரு பகுதியைக் கொண்டு
திருடிய
மற்றும் கொலைசெய்த
மற்றும் கடத்திய வீட்டில் வருகின்றனர் அதே வீட்டுக்கு உதவுகின்றனர்

அப்போது
அதாவது திருடும் போது சிறுவர்களாக இருந்தவர்கள் இப்போது பெரியவர்களாய் மாறிவிட்டனர்

திருடர்கள் அந்தப் பெரிய இளைஞர்களுக்கு செருப்பு வாங்கிக் கொடுப்பர்

இப்போது கேள்வி என்ன வெனில்
சிறுவர்கள் செருப்புக்கு நன்றி சொல்லி முகநூலில் போட்டோபோட்டு லைக் லீசிங்கொம்பனி நடத்துவார்களா

அல்லது திருடர்களிடம்
எனது அம்மா எங்கே
அப்பா எங்கே
வீடு எங்கே எனக் கேட்பார்களா

இன்றைய சில இளைஞர்கள் செருப்பை பிச்சையாக வாங்கி நன்றி செலுத்தும் போட்டோக்களை முகநூலில் பதிவிடுவது

அவர்களின் லைக் மன வியாதியையும்
அறிவு இல்லாமையும்
தேசிய அரசியல் இல்லாமையையும் வெளிப்படுத்துகிறது

இங்கு சில இளைஞர்கள் ஒருகாலம் எம்மை அழித்த இராணுவத்துடன் நின்று படமெடுத்து அவர்கள் தமக்கு செருப்பு தந்தது எனக்கூறி நன்றி செலுத்தி போதாக்குறைக்கு மற்றவர்களையும் நன்றி செலுத்தக் கூறுவது

தனது தமக்கை தாய் தந்தை தமையனுக்கு செய்யும் துரோகமாகும்

இந்தத் துரோக இளையோரின் அவசரக்குடுக்கையும் காமடி மண்டையும் எப்பதான் உடையுமோ தெரியவில்லை

இங்கு தக்கன பிழைக்கும் எனக் கூறி அமர்கிறேன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.