குளியாப்பிடிய நகரில் இரண்டு கடைகள் தீக்கிரை!


குளியாப்பிடிய நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இரண்டு கடைகளில் இன்று(08) முற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குளியாப்பிடிய நகர சபை, பொலிசார் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உணவகம் மற்றும் புத்தகக் கடையொன்றிலேயே மேற்படி தீ விபத்து இடம்பெற்றதாகவும், குறித்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.