கடத்தப்பட்ட சமுா்த்தி பணிப்பாளா் விடுவிப்பு!!

மாத்தறை மாவட்டத்தில் இலக்க தகடுகளற்ற இரு வெள்ளை வாகனங்களில் நேற்று கடத்தப்பட்ட சமுா்த்தி பணிப்பாளா் இரகசிய இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாாினா ல் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மீட்கப்பட்ட சமுா்த்தி பணிப்பாளா் காலி- கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மாத்தறை – ஊறுபொக்க பகுதியில் கடமையாற்றும் , பிரதீப் சுரங்க எதிரிசிங்க என்பவரே நேற்று, வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

பிரதீப் சுரங்க, தனது பிள்ளைகளை பாடசாலையில் விட்டுத் திரும்பிய போதே கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அவரைக் கடத்திச் செல்வதற்கு வந்திருந்த இரு வெள்ளை வான்களில், இலக்கத் தகடுகள் காணப்படவில்லை எனவும் ஒரு வான், ஊறுபொக்க பகுதியை நோக்கியும் மற்றைய வான் அதன் எதிர்த்திசை நோக்கியும் பயணித்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமுா்த்தி பணிப்பாளா் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் 3 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.