சிறிலங்கா பிரதமருடன் கனிமொழி சந்திப்பு!!

கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் திலிப் வேதாராச்சி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
சிறிலங்கா கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் ஊடுருவுவது தொடர்பான பிரச்சினை குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள், சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து இந்தச் சந்திப்பின் போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கவலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, கனிமொழி உள்ளிட்ட தமிழ்நாட்டு பிரமுகர்கள் பலரும், கொழும்பு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.