ராஜ் ராஜரத்தினம் கைதும், தமிழீழ நடைமுறை அரசின் அழிவும்!!
அமெரிக்க பங்குச்சந்தை அதிபர் ராஜ் ராஜரத்தினம் நீண்ட கால சிறைவாசத்தை அடுத்து சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா தமிழீழ நடைமுறை அரசை அழிக்க எடுத்த ஒரு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றுதான் ராஜ் ராஜரத்தினத்தை ஊழல் குற்றவாளியாக்கியமை.
தமிழின அழிப்பு திடீரென்று நடந்த நிகழ்வு அல்ல. அது 2001 இலிருந்து படிப்படியாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பல நிகழ்வுகளின் கூட்டு விளைவு.
எமது கண்ணுக்கு தெரிந்த நிகழ்வுகள் மட்டுமல்ல எமது அறிவுக்கு புலப்படாத பல விடயங்களும் அதன் பின்னணியில் இருந்ததை நாம் பிற்பாடுதான் அறிய முடிந்தது.
புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளைஅழிப்பதனூடாக தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் - குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon)
புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல், தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல், இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் தாக்குதல் திட்டத்தின் பெயர்தான் ” புரொஜக்ட பெக்கன்”
எங்கேயோ அமெரிக்காவில் இருந்த ராஜ் ராஜரத்தினம் என்ற பங்கு சந்தை தொழிலதிபர் திடீரென்று ஊழல் வழக்கில் அமெரிக்காவில் FBI ஆல் குற்றவாளியாக்கப்படுகிறார். விடயம் தெரியாதவர்களுக்கு இது ஒரு சாதாரண விடயம். ஆனால் நாம் மொத்தமாக அழித்தொழிக்கப்படப் போகிறோம் என்பதை கட்டியம் கூறிய நிகழ்வு இது
இது புராஜெக்ட் பெக்கானின் ஒரு பகுதி.
இதன் ஆழ அகலம் தெரியாத யாராலும் இது என்றுமே புரியப்படாது. அதை இங்கு விளக்க இடமும் காணாது. நாள் முழுக்க இருந்து எழுதினாலும் எழுதித் தீராத அரசியல் அது.
புலிகளின் பெரும் பகுதி பணம் இவரது பங்குச் சந்தையினூடாகவே தமிழீழ நடைமுறை அரசின் சுழற்சிக்குட்பட்டிருந்தது.
விளைவு தமிழின அழிப்பிற்கான நேரம் வந்த போது இவர் குற்றவாளியாக்கப்பட்டார்.
எனவே இலங்கை/ இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் 'தீர்ப்பு' களின் - 'நீதி' களின் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் இருக்கின்றன. - அதுவும் "உலக" அரசியல்.
புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் புலிகள் மேற்குலகத்திற்கு அடிபணிந்து போயிருந்தால் ராஜ் ராஜரத்தினம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருக்க மாட்டார்.
யோசிக்கத் தலை கிறுகிறுக்கும் தியரி இது.
வண்ணத்துப்பூச்சி விளைவு போன்ற பல நுண்ணதிர்வுகள் தமிழின அழிப்பில் கடந்து சென்றதை இப்போது புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இது எதுவும் தெரியாமல் புலிகளையே குற்றவாளிகளாக முன்னிறுத்தும் அற்பர்களால் நிரம்பி வழிகிறது தமிழ் அரசியல் பரப்பு.
தலைவர் போராடும் தேசிய இனங்கள் சார்ந்து எத்தகைய ஒரு பகடையாட்டத்தை ஆடினார் என்பதும்/ அவர் ஏன் நந்திக்கடல் நோக்கி நகர்ந்தார் என்பதற்குமான வரலாற்று சான்றுகள் இவை.
சிலரின் சந்தேகத்திற்காக இந்த பின்னிணைப்பு.
ராஜ் ராஜரத்தினம் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டது ஒக்டோபர் 2009.
அமெரிக்கா தமிழீழ நடைமுறை அரசை அழிக்க எடுத்த ஒரு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றுதான் ராஜ் ராஜரத்தினத்தை ஊழல் குற்றவாளியாக்கியமை.
தமிழின அழிப்பு திடீரென்று நடந்த நிகழ்வு அல்ல. அது 2001 இலிருந்து படிப்படியாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பல நிகழ்வுகளின் கூட்டு விளைவு.
எமது கண்ணுக்கு தெரிந்த நிகழ்வுகள் மட்டுமல்ல எமது அறிவுக்கு புலப்படாத பல விடயங்களும் அதன் பின்னணியில் இருந்ததை நாம் பிற்பாடுதான் அறிய முடிந்தது.
புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளைஅழிப்பதனூடாக தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் - குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon)
புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல், தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல், இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் தாக்குதல் திட்டத்தின் பெயர்தான் ” புரொஜக்ட பெக்கன்”
எங்கேயோ அமெரிக்காவில் இருந்த ராஜ் ராஜரத்தினம் என்ற பங்கு சந்தை தொழிலதிபர் திடீரென்று ஊழல் வழக்கில் அமெரிக்காவில் FBI ஆல் குற்றவாளியாக்கப்படுகிறார். விடயம் தெரியாதவர்களுக்கு இது ஒரு சாதாரண விடயம். ஆனால் நாம் மொத்தமாக அழித்தொழிக்கப்படப் போகிறோம் என்பதை கட்டியம் கூறிய நிகழ்வு இது
இது புராஜெக்ட் பெக்கானின் ஒரு பகுதி.
இதன் ஆழ அகலம் தெரியாத யாராலும் இது என்றுமே புரியப்படாது. அதை இங்கு விளக்க இடமும் காணாது. நாள் முழுக்க இருந்து எழுதினாலும் எழுதித் தீராத அரசியல் அது.
புலிகளின் பெரும் பகுதி பணம் இவரது பங்குச் சந்தையினூடாகவே தமிழீழ நடைமுறை அரசின் சுழற்சிக்குட்பட்டிருந்தது.
விளைவு தமிழின அழிப்பிற்கான நேரம் வந்த போது இவர் குற்றவாளியாக்கப்பட்டார்.
எனவே இலங்கை/ இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் 'தீர்ப்பு' களின் - 'நீதி' களின் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் இருக்கின்றன. - அதுவும் "உலக" அரசியல்.
புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் புலிகள் மேற்குலகத்திற்கு அடிபணிந்து போயிருந்தால் ராஜ் ராஜரத்தினம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருக்க மாட்டார்.
யோசிக்கத் தலை கிறுகிறுக்கும் தியரி இது.
வண்ணத்துப்பூச்சி விளைவு போன்ற பல நுண்ணதிர்வுகள் தமிழின அழிப்பில் கடந்து சென்றதை இப்போது புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இது எதுவும் தெரியாமல் புலிகளையே குற்றவாளிகளாக முன்னிறுத்தும் அற்பர்களால் நிரம்பி வழிகிறது தமிழ் அரசியல் பரப்பு.
தலைவர் போராடும் தேசிய இனங்கள் சார்ந்து எத்தகைய ஒரு பகடையாட்டத்தை ஆடினார் என்பதும்/ அவர் ஏன் நந்திக்கடல் நோக்கி நகர்ந்தார் என்பதற்குமான வரலாற்று சான்றுகள் இவை.
சிலரின் சந்தேகத்திற்காக இந்த பின்னிணைப்பு.
ராஜ் ராஜரத்தினம் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டது ஒக்டோபர் 2009.
ஆனால் அவரது நிறுவனத்தையும் அவரையும் குற்றவாளிகள் என எப்பிஐ விசாரணையை முடுக்கிவிட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து முடக்கியது 2006 இல். நீண்ட விசாரணையின் பின் 2009 இல் கைது செய்தார்கள்.
கருத்துகள் இல்லை