ஜனாதிபதி செயலகத்தில் மகாத்மா காந்தியின் ஜனன தின நிகழ்வு!!

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியாகவும் அகிம்சையின் தந்தை என்றும் உலகம் முழுவதும் போற்றப்படும் மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நிலையில், 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றது.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து ஆகியோர் மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட இலங்கை மற்றும் இந்திய விசேட பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.