ஜப்பான் கடல் பகுதியை நோக்கி வடகொரியா, ஏவுகணைகளை ஏவி வருவதாக குற்றச்சாட்டு!

வடகொரியா, ஜப்பான் கடல் பகுதியை நோக்கி ஏவுகணைகளை ஏவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


வடகொரியாவின் Wansan நகரிலிருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி இவ்வாறு ஏவுகணைகள் ஏவப்பட்டு வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணைகள் ஏவப்படுவதை தங்களது இராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தென்கொரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வடகொரிய வெளியுறவு துணை அமைச்சர் சோ சான் ஹூய் தெரிவித்துள்ளார்.

இதன் ஆரம்ப பணிகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டாகசும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் வாரமளவில் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அமெரிக்க ஜனாதிபதியும், வடகொரிய அரச தலைவரும் சந்தித்து பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.