பிரபல செய்தி வாசிப்பாளர் பீற்றர் சிசன்ஸ் காலமானார்!

செய்தி வாசிப்பாளர் பீற்றர் சிசன்ஸ் தனது 77 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


நேற்று இரவு கென்ற், மெய்ட்ஸ்ரோன் மருத்துவமனையில் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் சூழ்ந்திருக்க மீளாத் துயிலடைந்தார் என்று தெரிவிக்கப்படுள்ளது.


பீற்றர் சிசன்ஸ் ஐரிஎன், சனல் 4 மற்றும் பிபிசியின் செய்திப் பிரிவுகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுள்ளார்.


அத்துடன் பிரித்தானியத் தொலைக்காட்சிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க செய்தி வாசிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.


1942 இல் லிவர்பூலில் பிறந்த அவர் ஸ்பீக்கில் வளர்ந்தார். ஜோன் லெனன் மற்றும் ஜிம்மி ரார்பக் போன்ற ஆரம்பப் பள்ளிகளில் படித்த அவர் பின்னர் லிவர்பூல் இன்ஸ்டிடியூட் ஒஃப் போய்ஸில் சேர்ந்தார்.


ஓக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பீற்றர் சிசன்ஸ் 1964 இல் ஐரிஎன் இல் இணைந்துகொண்டார். 1968 இல் நைஜீரியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டபோது துப்பாக்கிச்சூடுக்கு இலக்காகிக் காயமடைந்தார்.


1969 இல் செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்ட அவர், 1978 ஆம் ஆண்டில் ஐரிஎன் இல் செய்தி வாசிப்பாளரானார்.


1989 ஆம் ஆண்டு பிபிசியில் இணைந்து கொண்ட அவர் 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்புத் துறையில் இருந்து ஓய்வுபெற்றார்.


பிரித்தானியாவில் மிக நீண்ட காலமாக செய்தி வாசிப்பாளராக விளங்கிய அவர் நேற்று இரவு காலமானார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.