தொல்பொருள் பொக்கிசங்களை எதிர்கால சந்ததியிடம் வழங்க அமைச்சரவையில் தீர்மானம்!

இலங்கையில் உள்ள தொல்பொருள் பொக்கிசங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் வழங்குவதற்காக 1940இல் அமைக்கப்பட்டிருந்த கட்டளைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1940ஆம் ஆண்டு இலக்கம் 9இன் கீழான தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 47ஆவது சரத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளில் திருத்தத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் திருத்த வரைபு ஒன்றை சமர்ப்பித்து அதற்கான அனுமதியைப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதி பெறலைத் தொடர்ந்து அந்த உத்தரவை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள தொல்பொருள் பொக்கிசங்கள் மற்றும் இலங்கைக்குள் உள்ள வரலாற்று அல்லது தொல்பொருளியல் முக்கியத்துவம் உள்ள இடங்கள், கட்டடங்களை மிகவும் சிறப்பாக களஞ்சியப்படுத்துவதற்காக 1940ஆம் ஆண்டு இலக்கம் 9இன் கீழான தொல்பொருள் கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் 47ஆவது சரத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக 1940ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி இலக்கம் 8698 என்ற வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டளையையே இப்போது பொருத்தமான வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.