எதிராளியை மிரட்டிய முறைப்பாட்டாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காசோலை மோசடி வழக்கில், எதிராளியை பொய் சாட்சியம் வழங்க வற்புறுத்தி மிரட்டிய முறைப்பாட்டாளரை யாழ்.நீதவான் கடுமையாக எச்சரித்தார்.


யாழ்.நீதவான் நீதிமன்றில் காசோலை மோசடி வழக்கொன்று நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கின் கடந்த தவணை விசாரணைகள் முடிவடைந்து, வழக்குடன் தொடர்புடையவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வந்தபோது, வழக்கின் முறைப்பாட்டாளர் மூன்றாம் எதிரியிடம் தனிப்பட்ட ரீதியில் அணுகி, தமக்கு சாதகமாக பொய் சாட்சியம் அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு எதிராளி மறுப்பு தெரிவித்து சென்றிருந்தார்.

பின்னர், அன்றைய தினம் மாலை கொக்குவில் பகுதியில் குறித்த மூன்றாம் எதிராளி தனது முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை, முறைப்பாட்டாளரின் சகாக்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை வழிமறித்து மிரட்டி முறைப்பாட்டாளருக்கு சாதகமாக பொய் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டி சென்றனர்.

குறித்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக மூன்றாம் எதிராளி யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிராளியின் சட்டத்தரணி, தமது கட்சிகாரர் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதனை அடுத்து நீதவான் முறைப்பாட்டாளரிடம் இவ்வாறான செயற்பாடுகளில் இனி ஈடுபட கூடாது என கடுமையாக எச்சரித்ததுடன், இனி அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுவீர் என கடுமையாக எச்சரித்தார்.

அதனை தொடர்ந்து அடுத்த தவணைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.