பொலிஸாரின் தடுப்பிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்!!

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


தடுப்புக்காவல் சந்தேகநபர் தப்பித்ததையடுத்து ரிசேவ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதுடன், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது ஓட்டுமடம் பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் அவர் சில மணிநேரங்களில் காணமற்போனார்.

இதனையடுத்து பொலிஸ் நிலைய சி.சி.ரி.வி. கமெராக்களின் பதிவுகளைச் சோதனையிட்ட போது, சிறைக்கூடத்தின் பூட்டு சரிவரப் பூட்டுப்படாமல் இருந்தமையும் அதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய சந்தேகநபர், சிறைக் கூடத்தைத் திறந்து சாதாரணமாக முன் வாயில் ஊடாக வெளியேறிச் செல்வதும் தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேகநபரைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்ட போதும், அவர் தலைமறைவாகியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.