திருகோணமலை மயானத்தில் ஆயுதங்கள் மீட்பு!!

திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்டம் பிரதேச மாயானத்தில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாயானத்தில் இறந்தவர் ஒருவரின் நல்லடக்கத்திற்காக குழி வெட்டும்போது பிளாஸ்டிக் பெரல் ஒன்று தட்டுப்பட்ட நிலையில், அதனை திறந்து பார்த்தபோது ஆயுதங்கள் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழி வெட்டியவர்களினால் உப்புவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்லது.

இதனையடுத்து மயானத்திற்கு சென்ற பொலிஸார் M-17 Ab-2 வர்க்க ரி 56 துப்பாக்கிகள் 5 (தயாரிப்பு யுகஸ்லாவியா ), எஸ்.எம்.ஜி-1, ரி 56 துப்பாக்கி மகஸீன் 5, எஸ்.எம்.ஜி- மகஸீன் 3, ரி 56 துப்பாக்கி சன்னங்கள் 1700, 9 எம்.எம் துப்பாக்கி சன்னங்கள் 32 ஆகியவற்றினை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாவும் பாவிக்கும் நிலையில் காணப்படுவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை குறிப்பிட்ட பிரதேசத்தில் இந்தியா அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் டெலோவின் பயிற்சி முகாம் இயங்கியதாக தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.