தமிழர்களை நாங்கள் கொல்லவில்லை -கோட்டாபய!📷
நாங்கள் போரை உருவாக்கி தமிழர்களை கொல்லவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் செய்தது நாட்டில் நீண்ட காலமாக நடைபெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தது மாத்திரம்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலையக இளைஞர் அணியால் நேற்று சனிக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலையக இளைஞர் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சாதாரண பொதுமக்களை கொன்றது நாங்கள்தான் என வீணாக பழி சுமத்தி தமிழ் மக்களிடத்தில் குற்றவாளிகளாக எங்களை காட்டுவதற்கு போரை தோற்றுவித்தவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
உண்மையாகவே நாங்கள் போரை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கவில்லை. அதனை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதி நிலைமையை ஏற்படுத்தியது மாத்திரமே ஆகும்.
எனவே, இவ்விடயத்தில் எம்மீது வீண்பழியே சுமத்தப்படுகின்றது என்பதை மக்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதேவேளை தேர்தல் நெருங்கும்போது பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவார்கள் ஆனால் வெற்றியடைந்த பின்னர் அவ்விடயம் குறித்து சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை.
இவைகள்தான் காலம் காலம் இடம்பெற்று வருகின்றது. ஆனால், எமது ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் அனைத்துக்கும் உரிய தீர்வு வழங்கப்படும்.
மேலும் மலையகத்தில் கல்வித் தேவை இதுவரையில் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை. அத்துடன் அம்மக்கள் பல்வேறு அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்றனர். ஆகையால் அவர்கள் விடயத்திலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் மனைவி கலந்துகொண்டு மங்கள விளக்கை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மலையக இளைஞர் அணியால் நேற்று சனிக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலையக இளைஞர் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சாதாரண பொதுமக்களை கொன்றது நாங்கள்தான் என வீணாக பழி சுமத்தி தமிழ் மக்களிடத்தில் குற்றவாளிகளாக எங்களை காட்டுவதற்கு போரை தோற்றுவித்தவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
உண்மையாகவே நாங்கள் போரை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கவில்லை. அதனை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதி நிலைமையை ஏற்படுத்தியது மாத்திரமே ஆகும்.
எனவே, இவ்விடயத்தில் எம்மீது வீண்பழியே சுமத்தப்படுகின்றது என்பதை மக்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதேவேளை தேர்தல் நெருங்கும்போது பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவார்கள் ஆனால் வெற்றியடைந்த பின்னர் அவ்விடயம் குறித்து சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை.
இவைகள்தான் காலம் காலம் இடம்பெற்று வருகின்றது. ஆனால், எமது ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் அனைத்துக்கும் உரிய தீர்வு வழங்கப்படும்.
மேலும் மலையகத்தில் கல்வித் தேவை இதுவரையில் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை. அத்துடன் அம்மக்கள் பல்வேறு அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்றனர். ஆகையால் அவர்கள் விடயத்திலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் மனைவி கலந்துகொண்டு மங்கள விளக்கை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை