யாழ். பொஸ்கோ வித்தியாலயத்தில் 171 மாணவர்கள் சித்தி!

யாழ்ப்பாணம், புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் 258 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.


இதில் 171 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து உள்ளதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.

அத்தோடு பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 194 புள்ளிகளை கேசவன் தர்ஷன் என்ற மாணவன் பெற்று தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் 50 வீதமான மாணவர்கள் சித்தி அடைந்ததாகவும், இம்முறை 66 வீதமான மாணவர்கள் சித்தியடைந்து உள்ளதாகவும் கல்லூரி அதிபர் தெரிவித்தார்.

பரீட்சை முடிவுகளை www.results.exams.gov.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.