கோட்டா – தயாசிறி புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

கோட்டாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.


கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதே அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எமது இந்த முடிவை எவரும் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஜனாதிபதி இந்த முடிவை நாம் எடுப்பதற்காக எமக்கு பூரண சுதந்திரத்தை வழங்கியிருந்தார்.

நாம் இதற்காக கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இதற்கு எமது கட்சியின் அனைத்து தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.

வரலாறுகளில் இடம்பெற்ற சம்பவங்களை நாம் மீண்டும் கதைக்க வேண்டியத் தேவைக் கிடையாது. இந்த நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை நாம் எடுத்துள்ளோம்.

ஜனாதிபதி கடந்த நான்கு வருடங்களாக இந்த நாட்டிற்காக பல்வேறு சேவைகளை மேற்கொண்டுள்ளார். ஊழல் ஒழிப்பு, ஊடக சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்திற்கும் அவர் குரல் கொடுத்தார்.

இந்த செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்காக நாம் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளோம்.

எதிர்க்காலத்தை பற்றித்தான் இனிமேல் சிந்திக்க வேண்டும். இதற்காக அனைவரது ஒத்துழைப்பையும் நாம் இவ்வேளையில் எதிர்ப்பார்க்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.