வவுனியா குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கதி - ஆபத்தான நிலையில் கணவன்!!

வவுனியா, கற்பகபுரம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தீயில் எரிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் மரணமடைந்துள்ளார்.


கடந்த திங்கள்கிழமை (07) மாலை வவுனியா கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தீயில் எரிந்த நிலையிலும், கணவன் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையிலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இருவருக்கும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதுடன், கணவன் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்ற கணவன் விபத்து பிரிவில் இருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று அதன் கதவை உடைத்து அதன் ஊடாக நிலத்தில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளதுடன் சிறிய கத்தியால் கழுத்தையும் அறுக்க முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், பொலிசார் இணைந்து மூன்றாம் மாடியில் இருந்த யன்னலை உடைத்து அதனூடாகச் சென்று குதிக்க முயன்ற நபரை காப்பாற்றியுள்ளனர்.

கழுத்தில் காயமடைந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி நிதர்சன் தர்சினி (34) சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கணவன் சி.நிதர்சன் (27) தெர்டர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.