வவுனியா கொந்தகாரன்குளத்தில் முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்!

வவுனியா ஓமந்தை மருதமடு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கொந்தகாரன்குளத்தில்  PSDG-2019
திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த  07.10.2019 திங்கட்கிழமையன்று இடம்பெற்றது.
 கொந்தகாரன்குளம் அ.த.க.பாடசாலையின் அதிபர் திரு.ந.நவரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு.ஞானமுத்து அகிலன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதி பிரதம செயலாளர் அலுவலகம்-திட்டமிடல் வடமாகாணம்) கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார். மேற்படி நிகழ்வில் மருதமடு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், முன்பள்ளியின் ஆசிரியை,தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்    

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.