மஹிந்த தரப்பினர் கடந்த காலங்களில் செய்தவற்றை பெண்கள் மறக்கவில்லை – சந்திராணி பண்டார!!

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்த செயற்பாட்டை நாட்டின் மக்கள் மறக்கவில்லை என அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.


தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே உரையாற்றிய அவர், “கடந்த பல ஆண்டுகளாக நாம் கனவு காண்கின்றோம். கடந்த 25 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி இல்லை.

இன்று வந்துள்ள கூட்டத்தைப் பார்க்கும்போது, நவம்பர் 17 ஆம் திகதி சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக இருப்பார் என்று எனக்குத் தெரிகின்றது.

இந்த நாட்டு மக்கள் மறக்கவில்லை, மஹிந்த ராஜபக்ஷவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பெண்களை எவ்வாறு துஸ்பிரயோகம் செய்தார்கள்.

அதுமட்டுமல்ல, மஹிந்த அணியினரது முறைகேடான உத்தரவுகளை கேட்காதமையினால் ஷிராணி பண்டாரநாயக்க வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதனை நாட்டின் பெண்கள் மறக்கவில்லை” என்றார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.