காணாமல் போன மீனவர்களில் இருவர் உயிருடன் மீட்பு!!

சாய்ந்தமருது மாளிகைக்காடு பகுதியிலிருந்து காணாமல்போன மீனவர்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில்இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிருடன் மீட்கப்பட்ட குறித்த இருவரும் நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது ஹிஜ்ரா வீதியை சேர்ந்த இஸ்மாலெப்பை முஹம்மட் ஹாரிஸ், மற்றும் சாய்ந்தமருது, முந்திரியடி பகுதியை சேர்ந்த சீனி முஹம்மது ஜூனைதீன் ஆகிய இருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைதீவு - மங்கிளிப்பு சப்பு வீதியைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீ கிருஷ்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 18ஆம் திகதி ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றபோது படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டு நிலையில் மூன்று மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் மூவரில் ஒருவர் கடலில் உயிரிழந்த நிலையில் படகில் வைத்திருந்தபோது துர்நாற்றம் வீசியதால் சடலத்தை கடலில் வீசியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.