காத்தான்குடியைச் சேர்ந்த 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 64 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில், இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இம்மாதம் 24ஆம் திகதி சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை சந்தேகநபர்களில் 04 பெண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.