அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார் எத்தியோப்பியப் பிரதமர்!!

எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு (Abiy Ahmed) அமைதிக்கான நோபல் பரிசு 2019 வழங்கப்பட்டுள்ளது.


அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா கடந்த ஆண்டு எரித்திரியாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 1998-2000 எல்லைப் போரைத் தொடர்ந்து 20 ஆண்டுகாலம் நிலவிய ராணுவ நெருக்கடிக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டது.

ஒஸ்லோவில் நடைபெற்ற 100 வது அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்கும் விழாவில் அமைதிக்கான நோபல் பரிசு 2019 எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்குக் கிடைத்துள்ளது.

ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் கிரௌன்ஸ் (£730,000) மதிப்புள்ள இந்தப் பரிசு டிசெம்பர் மாதம் ஒஸ்லோவில் அவருக்கு வழங்கப்படும்.

அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு 301 பேர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.