பாக்- ராணுவம் அத்துமீறல்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் !!

ஜம்மு காஷ்மீரில் பாக்கிஸ்தான் ராணுவம் இன்று காலை மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் நம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷெரா பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் இன்று காலை மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஏற்கனவே பலமுறை, அந்நாட்டு ராணுவம், நம் நாட்டு எல்லையில் பலமுறை தாக்குதல் நடத்திய நிலையில், இன்றைய தாக்குதலில் நம் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்ட சக வீரர்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனை தொடர்ந்து நம் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.