வாகரை அருந்ததி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் நான்கு மாணவர்கள் சித்தி!!

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சையில் நான்கு மாணவர்கள் சித்திபெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் முதல்வர் சி.மோகனசுந்தரம் தெரிவித்தார்.


கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் இம்முறை நான்கு மாணவர்கள் 152 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று வாகரை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்தோடு கடந்த 2006ம் ஆண்டும் நான்கு மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர்.

அந்த வகையில் செல்வி.யூ.வாணிலக்ஸனா 161 புள்ளிகளையும், செல்வி.டி.ஜசானி மிலிஷா 159 புள்ளிகளையும், செல்வி.ஆர்.நதுசானி 155 புள்ளிகளையும், செல்வி.பி.டிலச்சிக்கா 155 புள்ளிகளையும் பெற்றுள்ளதாக கல்லூரியின் முதல்வர் சி.மோகனசுந்தரம் மேலும் தெரிவித்தார்.

இவ் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களான திருமதி.விஜயலெட்சுமி மணிவண்ணன், வ.வேதாகரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றௌர்கள் அனைவரையும் பாராட்டுவதாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு அதிக கஷ்ட பிரதேசமான வாகரைப் பிரதேசத்தில் கல்வி வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் தனி நபர்களின் வீடுகளில் கண்டலடி அருந்ததி வித்தியாலய மாணவர்களுக்கு இரவு நேர பிரத்தியே வகுப்புக்களை நடாத்தியதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.