அதிகளவான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சாதனை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு 2333 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதில் 275 மாணவர்கள் 152 வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் என கல்வித்திணைக்கள தகவல்கள் குறிப்பிடுகின்றன.


இதில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 40 மாணவர்களும், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் 24 மாணவர்களும், சென்திரேசா பெண்கள் கல்லூரி மற்றும் தர்மபுரம் இல1 பாடசாலைகளில் 12 மாணவர்களும், கிளி இந்து ஆரம்ப வித்தியாலம்,

மலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலயம், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 11 மாணவர்களும், திருவையாறு மவி. பளை இந்து ஆரம்ப வித்தியாலயம் பாடசாலைகளில் 10 மாணவர்களும் என அதிக படியாக சித்தியடைந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தைச் சேர்ந்த இராசலிங்கம் கேதுசன் 194 புள்ளிகளையும் தர்மபுரம் இலக்கம் 1 பாடசாலையில் சத்தியசீலன் சங்கமன், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருஷ்ணநாதன் ஹர்னிகா, சிறிதரன் கோயுரதன் ஆகிய மாணவர்கள் 187 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.