ஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ் புயல்!!

ஜப்பானில் கடந்த 60 வருடங்களில் இல்லாதளவு ஹகிபிஸ் புயல் தாக்கியுள்ளது. இதனால், தலைநகர் டோக்கியோக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே புயல் பாதிப்புக்களை ஜப்பான் எதிர்கொண்டுள்ள நிலையில் சில பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காற்று மணிக்கு 180 கி.மீ வேகத்தில் வீசிவருவதனால் மேலும் மழை வீழ்ச்சி மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக ஜப்பான் வானியல் ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

ஆயிரக்கணக்கான விமான சேவைகளும், ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ரக்பி உலகக் கிண்ணம், போர்முலா 1 கார்பந்தயம் போன்றனவும் நிறுத்தப்பட்டுள்ளன.

மக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கடைகள் மற்றும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

கிழக்கு டோக்கியோவில் ஹகிபிஸ் புயல் தாக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வீதிப்போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.