பருவநிலை மாற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேர் கைது!!

அமெரிக்காவில் பருவநிலை மாற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வீதியின் குறுக்கே படகொன்றை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஐ.நா சபையில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார்.

இதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் பருவ நிலை மாற்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நியூயோர்க் நகரில் உள்ள மான்ஹாட்டன் பகுதியில் பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி பருவநிலை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘உடனே செயற்படு’ என்ற வாசகம் எழுதப்பட்ட பச்சை நிற படகு ஒன்றை நிறுத்தி, ஓரஞ்சு நிற உயிர் காக்கும் மேற்சட்டைகளை அணிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை கைது செய்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.