13 அம்சக் கோரிக்கைகள்:தமிழர் தரப்பை சந்திக்க் தயங்கும் பிரதான வேட்பாளர்கள்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமிழ்த்தேசியத் தரப்புக்களான ஐந்து கட்சிப் பிரதிநிதிகளைச் சந்திப்பதில் தயக்கம் காட்டிவருவதாக நம்பகரமாக தெரியவருகிறது.


வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய உடன்படிக்கையில் ஐந்து தமிழ்க்கட்சிகள் கையொப்பம் இட்டிருந்தன.

குறித்த கோரிக்கைகள் இராணுவத்தினருக்கு எதிரான நிலைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் காணப்படுவதால் இவற்றை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தால் இனவாத ரீதியிலான பாதிப்பை வாக்குவங்கியில் எதிர்கொள்கொள்ளவேண்டும் என்பதால் பிரதான வேட்பாளர்கள் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கைகளுடன் வந்தால் குறித்த கட்சிகளை சந்திக்கவே போவதில்லை என்று பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருக்கின்றார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் நேரம் இல்லை என்று தெரிவித்து சந்திப்பினை இழுத்தடித்துவருவதாக தெரியவருகிறது.

இதனிடையே ஜேவிபி முக்கியஸ்தர் விஜித ஹேரத் கருத்­து­வெ­ளி­யி­டு­கையில், வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி கோரிக்கை போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்கள் தொடர்பில் பேச முடியாது என்று தெரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.