தூரிகை..!!
ஒரு வெள்ளி நிலவை கையிலெடுத்து விளையாட முடியவில்லை
காலம் என்கையில் முட்களைப் பூக்களாய் உதிர்த்தியது
வானம் கறுக்கும் ஓர் பொழுதிலும்
ரிசிகள் என்னுள் ஒளியேற்றின
காலக் கடலில் நீந்திக்
குதூகலிக்கையில்
திமிங்கிலங்களாய் வருகிறான்
கால பைரவன்
ஆனாலுமென்ன
நானோர் ஓடையில்
கவிதையைக் கட்டிப் பிடித்தவனாய்
பறந்து கொண்டிருக்கிறேன்
காலப் பாய் விரிந்தே கிடக்கிறது
எனது துயில்த்தலின் இடைவெளிகளில்
காலம் புவிச் சுழற்சியாய்
நிற ஆடை உடுக்கிறது
ஆனாலுமென்ன
நான் ஆடையின்றி மிதக்கிறேன்
எனது ஆடை வானமும் கடலும் ஆதலால்
நான் வெள்ளையைச் சூடிய
வெண்தாமரை
எனைச் சூடிய சகதிகள் எதுவும் செய்வதில்லை
ஏனெனில்
தூய்மை எனது தூரிகை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
காலம் என்கையில் முட்களைப் பூக்களாய் உதிர்த்தியது
வானம் கறுக்கும் ஓர் பொழுதிலும்
ரிசிகள் என்னுள் ஒளியேற்றின
காலக் கடலில் நீந்திக்
குதூகலிக்கையில்
திமிங்கிலங்களாய் வருகிறான்
கால பைரவன்
ஆனாலுமென்ன
நானோர் ஓடையில்
கவிதையைக் கட்டிப் பிடித்தவனாய்
பறந்து கொண்டிருக்கிறேன்
காலப் பாய் விரிந்தே கிடக்கிறது
எனது துயில்த்தலின் இடைவெளிகளில்
காலம் புவிச் சுழற்சியாய்
நிற ஆடை உடுக்கிறது
ஆனாலுமென்ன
நான் ஆடையின்றி மிதக்கிறேன்
எனது ஆடை வானமும் கடலும் ஆதலால்
நான் வெள்ளையைச் சூடிய
வெண்தாமரை
எனைச் சூடிய சகதிகள் எதுவும் செய்வதில்லை
ஏனெனில்
தூய்மை எனது தூரிகை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை