பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யும் வில்லியம் – கேற் தம்பதியினர்!

பிரித்தானிய இளவரசர் வில்லியம் – கேற் தம்பதியினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளனர்.


குறித்த இருவரையும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும், அவரது மனைவியும் வரவேற்றுள்ளனர்.

ஐந்து நாள் பயணமாக பாகிஸ்தானில் தங்கியிருக்கவுள்ள அரச தம்பதியினர், பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

அத்துடன், லாகூர் மற்றும் பாகிஸ்தானின் மேற்கு மாகாணங்களுக்கும் அவர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து கடந்த 2006-ம் ஆண்டு சார்ள்ஸ் – கமிலா தம்பதியினர் வந்து சென்றதை அடுத்து வில்லியம் – கேற் தம்பதியினரே பாகிஸ்தானுக்கு முதன் முறையாக வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.