பயங்கரவாதிகளுக்கு என்னுடைய ஆட்சியில் மரண தண்டணை- சஜித்!!

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு துாக்கு தண்டணை விதிப்பேன் என கூறியிருக்கும் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட் பாளா் சஜித் பிறேமதாஸ, இராணுவத்தை பலப்படுத்துவேன் எனவும் கூறியுள்ளாா்.


நிட்டம்புவவில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திலேயே தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக சிறந்த அக்கறை கொண்ட சமூகங்களிடமிருந்து

தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் எந்தவொரு சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களைவிட முன்னுரிமை வழங்கப்படமாட்டாது. நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ருவான்வெல்லவில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எனது அரசில் பாதுகாப்பு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார்.

அவரது கடமைகளில் நான் தலையீடு செய்யமாட்டேன். புலனாய்வுத் துறைக்கு உரிய பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக வலுப்படுத்துதல், நவீன ரக ஆயுதங்களுடன் இராணுவத்தை மேம்படுத்துவதே எனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.