தென்கொரிய நீதி அமைச்சர் பதவி விலகல்!

தென்கொரிய நீதி அமைச்சர் சோ குக் பதவி விலகியுள்ளார்.


தென்கொரிய நீதி அமைச்சராக, சோ குக்கை ஜனாதிபதி மூன் ஜே-இன் கடந்த மாதம் நியமித்திருந்தார்.

எனினும் அவருக்கு எதிராகவும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அத்துடன், அவரது நியமனத்திற்கு எதிராக சியோல் நகரில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையிலேயே அவர் நேற்று(திங்கட்கிழமை) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் நீதித்துறையிலும், விசாரணை அமைப்புகளிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு உறுதியேற்றிருந்தேன்.

இதன் காரணமாக, எனது குடும்பம் குறிவைக்கப்பட்டுள்ளது. எனது நியமனத்தால் எழுந்த குழப்பத்துக்கு மக்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.