ஒரு தொகை கேரள கஞ்சாப் பொதிகள் கடலில் மீட்பு!!

தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் நேற்று (திங்கட்கிழமை) மீட்டுள்ளனர்.


சந்தேகத்திற் கிடமான 2 பொதிள் தலைமன்னார் கடற்படப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில், கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

அதன்பின்னர் குறித்த இரண்டு பொதிகளையும் மீட்ட கடற்படையினர் அதனை சோதனைக்கு உற்படுத்திய போது கேரள கஞ்சா காணப்பட்டமை தெரிய வந்தது.  மீட்கப்பட்ட இந்த கஞ்சா சுமார் 86 கிலோ 520 கிராம் என கடற்படை தெரிவித்துள்ளது.

தலைமன்னார் கடவிவ் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளின் காரணமாக குறித்த கஞ்சா பொதிளை சந்தேக நபர்கள் கடலில் போட்டு விட்டு தப்பித்திருக்க முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.