உலக உணவு தினம் – “நம் செயல்களே நம் எதிர்காலம்”

உலகில் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்ற தொனிப்பொருளில் வருடந்தோறும் ஒக்ரோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.


இந்த வருடத்தின் தொனிப்பொருள் “நம் செயல்களே நம் எதிர்காலம்” என்பதாகும். இந்த கொள்கையின் மூலம் தான் உலகில் அனைவருக்கும் உணவு வழங்கமுடியும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

உண்ணும் உணவு போஷாக்கானதாக இருக்கவேண்டும் என்றும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகளின் உணவு வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்களைக் கைவிட்டு உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ளவும் அந்த அமைப்பு வலியுறுத்தல் விடுத்துள்ளது.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் கொண்டவர்கள் பல நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும், பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இயன்றளவு வீட்டில் உணவுகளைச் சமைக்கலாம் என்றும், உணவை வீணடிக்க வேண்டாம் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, உலகில் 400 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள உணவு வியாபார நிலையங்களுக்கு செல்வதற்கு முன்னரே வீணாகுவதாக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு வேளாண்மை அமைப்பு அத்தகைய விரயமாகும் உணவுகளின் தொகையை கணக்கிட்டு அறிக்கை விடுத்துள்ளது.

இன்றைய உலக உணவு தினத்தை முன்னிட்டு ஐ. நா. அமைப்பின் அறிக்கை வெளிவந்துள்ளது. வருடத்திற்கு 14 சதவீதம் உணவு வீணாக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் தெற்காசியாவில் மாத்திரம் 20 சதவீதம் அதிகமாக உணவு வீணடிக்கப்படுவதாகவும், வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 15 சதவீதத்திற்கு மேல் உணவு விரயமாவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, உணவு விரயத்தை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.