24 மணி நேரத்திற்குள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு – சஜித்!

தேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்து, ஒரு நாளுக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


கெகிராவையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், அந்தவகையில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஜனாதிபதி பணிக்குழுவின் அலுவலகத்தை அமைப்போம் என்றும் கூறினார்.

அதன்படி மக்கள் தங்கள் பகுதிகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, இந்த அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என்றும் அவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் ஒரு தரப்பு விவசாயிகளுக்கு மாத்திரமன்றி, நெற்செய்கையாளர்களுக்கும் மேட்டு நில பயிர் செய்கையாளர்களுக்கும் மரக்கறி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் பழச் செய்கையில் ஈடுபடுவோருக்கும் இலவசமாக உரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.